search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலாயுதம்பாளையம் சிறுவன் பலி"

    வேலாயுதம்பாளையம் அருகே மண் சரிந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம்:

    திருச்சி மாவட்டம், கல்லணைப் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (60) இவர் வேலாயுதம்பாளையம் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள செங்கல் தயாரிக்கும் சூளையில் குடும்பத்துடன் செங்கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சம்பதன்று செங்கல் தயாரித்துக் கொண்டிருக்கும் போது இவரது மகன் தர்மராஜ் (11) அங்கு குவியலாக கிடந்த மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

    அப்போது திடீரென மண் சரிந்து தர்மராஜ் மீது விழுந்தது. இதில் சிறுவன் மூச்சி திணறி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #Tamilnews

    ×